முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோண கொண்டைக்காரி Vs அண்டங்காக்கா கொண்டைக்காரி

கொண்டை என்பது என்ன? பெண்கள் தங்கள் நீண்ட கூந்தலை ஒற்றைக் கற்றையாய்ப் பிடித்து,சிறுவட்டமாய்ச் சுற்றி செய்யப்படும் ஒரு சிகை அலங்காரம். கொண்டையில் பன்கொண்டை,கொட்டாங்குச்சி கொண்டை, வளையல் கொண்டை என பல்வேறு வகைகள் உள்ளன.மாடர்ன் மங்கையர் யாரும் இச்சிகையலங்காரத்தைச் செய்வதில்லை என்றாலும் வயதானவர்களில் கொண்டை இடாதவர்களைக் காணமுடியாது. கொண்டை ஊசிகள், ரப்பர்பேண்ட்கள் என எதுவும் தேவையில்லாமல் கையாலேயே செய்யக்கூடிய எளிமையான சிகையலங்காரம்தான் இது என்பதை மறுப்பதற்கில்லை

         கொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும்கிளி கையில்வைத்து என்று மதுரை மீனாட்சியை வர்ணித்து பாடும் பக்திப் பாடலை அனைவரும் அறிந்திருக்கிறோம்.பெண்ணிற்கு அழகு சேர்ப்பதில் கொண்டைக்கு உண்டு பெரும்பங்கு.தமிழ் திரைப்படங்களில் வெவ்வேறு காலகட்டத்தில் வெளியான இரண்டு வகை கொண்டைகளை உடைய பெண்ணைப் பற்றிய பாடல்களைத்தான் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.

மதயானைக் கூட்டம் படத்தில் இடம்பெற்ற கோண கொண்டைக்காரி பாடலும் அந்நியன் படத்தில் இடம்பெற்ற அண்டங்காக்கா கொண்டைக்காரி பாடலும்தான் அவை.

கோண கொண்டைக்காரி என்பது ஒரு சாய்ந்த நிலையிலிருக்கும் கொண்டையைக் கொண்ட பெண்ணே என்ற பொருளில் துவங்குகிறது இந்தப் பாடல். ஆனால் இந்த கோண கொண்டைக்காரியின் குணநலன்கள் சொல்லும்படியாக இல்லை என்பது வருத்தம் தரக்கூடிய  விஷயம் தான்.கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே..என்று துவங்குகிறது இந்த பாடலின் இரண்டாவது வரியில் கண்ணால் குத்திவிட்டு மூன்றாவது வரியில் கொன்று விடுகிறாள் இந்த கோண கொண்டைக்காரி. அதாகப்பட்டது கொல்லல் தரும் துன்பத்தைத் தலைவனுக்குக் கொடுக்கிறாள்.அடுத்தடுத்த வரிகளைப்பார்த்தால் கோண கொண்டைக்காரி வன்முறையின் மொத்த உருவமாய் இருக்கிறாள் என்பது புலனாகும்.

'தினம் தினம் சிரிக்ககுள்ள

கேப்பையாட்டம் என்னை திரிக்குரா

அய்யய்யோ கடுகுதுண்டு இடையவச்சி

கிறங்க அடிக்குறா

குமரி புள்ள நேசம்

அட கோழி குழம்பு வாசம்

உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு

உசுர அறுக்குரா' இவ்வரிகளில் திரித்தல்,கிறங்க ஆடித்தல் போன்றவற்றைச் செய்துவிட்டு உள்ளுக்குள் ஒளிந்துகொண்டும் உயிரை அறுக்கும் வேலையச் செய்கிறாள்.

நம்ப வைத்து கழுத்தறுத்தல் என்று ஒரு சொற்றொடரைக் கேட்டிருக்கிறோம்.இதுவும் சற்றேறக்குறைய அதே முறைதானோ என எண்ணத் தோன்றுகிறது.இவ்வாறாக அவளுடைய குண நலன்கள் அறிந்த தலைவன் போரால சாவில்லை மாரால்தான் சாவு என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்.

'இங்க அறுவா தூக்க தானே

நம்ம ஆளு குறைஞ்சு கிடக்கு

அவ பத்துபுள்ள என்னைபோல

பெத்து கொடுக்கணும்'

என்பதன் மூலம் இந்த இணை வன்முறை கலாச்சாரத்தை வளர்க்க அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே படுகிறது.இவர்களின் சந்ததிகளுக்கும் இந்த வன்முறையைப் புகட்டிவிடுவார்களோ எனும் எண்ணம் எழுவதையும் தடுக்க முடியவில்லை.

அண்டங்காக்கா கொண்டைக்காரி பாடலில் கொல்லுதல்,குத்துதல்,உயிரை அறுத்தல், அருவா போன்ற வன்முறையை விதைக்கும் சொல்லாடலும் இல்லை. அச்சுவெல்லம்,இஞ்சிமரப்பா,மா,பலா,வாழை,கற்கண்டு,பிசுரு மிட்டாய்,பால் என இனிமை நிறைந்த சொற்களே ஆங்காங்கு தென்படுகின்றன.தலைவன் தலைவி இருவருக்கும் இடையேயான அன்பின் வெளிப்பாடுதான் அதிகமாய் இருக்கிறது.


இஞ்சி மரப்பா இடுப்பை பாத்து கசங்கி போனேண்டீ

ஈர உதட்டில் சூடு பரப்பி இஸ்திரி போடேண்டீ

எனும் வரிகளில் வன்முறை இருப்பதுபோல் தெரியலாம்.ஆனால் கசங்கிப் போனேன்டீ என்று தலைவன் சொல்லுகிறான்,ஆகையால் இது தலைவியின் தவறு இல்லை.தானாக முன்வந்து கசங்கிப் போவதாகத்தான் இதனைப் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது.ஈர உதட்டில் சூடுபரப்பி இஸ்திரி போடுவதையும் இவ்வகையில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பழம் தின்னி வவ்வா பல்லு படாம கவ்வி கொள்வாயா என்பதன் மூலம் பல் படாத மென்மை இதில் வெளிப்படுகிறது.கவ்வுவதில் வன்முறைக்கு வாய்ப்பிருந்தும் அவ்வாறு செய்யாதது உண்மையில் பாராட்டத்தக்கதே

அன்பை விதைக்கும் அண்டங்காக்கா கொண்டைக்காரி,ஆயுத கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் கோண கொண்டைக்காரியைவிட ஒரு படி மேலே நிற்கிறாள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.வெறும் அண்டங்காக்கா கொண்டைக்காரி என்று சொல்லிவிட முடியாமல் அன்பின் மூலம் இந்த அகிலத்தை அண்டத்தைக் காக்க வந்த அண்டங்காக்கை என்று இம்சை அரசன் 23ம் புலிகேசியில் சொல்வதுபோல் கூறுவதுதான் பொருத்தமாய் இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எங்க ஊரும்......செல்போனும்.......

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் செல்லிட பேசிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எங்கள் ஊரில் ( தி கிரேட் தேத்தாகுடி ,வேதாரண்யம் ) உலவத் தொடங்கியது . அது ஏற்படுத்திய ஆச்சரியங்கள் , விளைவுகள் பற்றி சொல்லனும்னா டாப் அப் பண்ணி மாளாது.எஸ் எம் எஸ் மாதிரி கொஞ்சம் இங்கே............ எம்மக்கள் முதலில் பயன்படுத்திய மொபைல்கள் வெளிநாட்டு இறக்குமதிகளே .பெரும்பாலும் அது அரை செங்கல் வடிவம் கொண்டதாய் இருந்தது .. அதை அவர்கள் , என்ன மாடல் போன் எனும்போது முப்பதிமூனு பத்து என்றே வழங்கி வந்தனர் . எட்டு மைலுக்கு அப்பால் இருந்து சிறிது சிக்னல் கிடைத்தது,அதில் முழு உரையாடல் நிகழ்த்திய வரலாறு இருந்ததற்குச் சான்று எதுவும் இல்லை ஒரு போன் பண்ணா ரெண்டு ரூவா வெட்டிபுட்டு,என்றும் டெக்னிகல் வார்த்தைகளை உபயோகித்தனர். அருகில் டவர் இல்லாததாலும் சிக்னல் வீரியமின்மை காரணமாகவும் அதன் பயனை முழுதாக அடைய முடியவில்லை . விடா முயற்சி உடைய சிலர் மொட்டை மாடி , வெட்ட வெளிகளில் சிக்னல் பெற்றனர் .

ஷாப்பிங் 'மால்'

ஷாப்பிங் 'மால்' (இது செப்டம்பர் மாதம் 2013 ஆம் ஆண்டு விகடன் குழும இதழ்களில் ஒன்றாக இருந்த டைம்பாஸ் இதழில் வெளியானது.)ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம் என்ற செய்தி இப்பொழுது குடிமகன்களின் வயிற்றில் பீர் மற்றும் பிராந்தியை வார்த்திருக்கிறது. மால் எனும் ஹிந்தி வார்த்தைக்கு தமிழில் சரக்கு என்று பொருள்.இப்பொழுதுதான் ஷாப்பிங் மால் என்பதே அர்த்தமுள்ளதாய் விளங்கப்போகிறது.இதன் சாதக பாதகங்கள் என்ன என்பதை விளக்குவதே இந்த சிறப்புப் 'பார்'வை.  டாஸ்மாக்ல இருக்குறப்போ போன் வந்தா  என்ன சொல்றதுன்னு?  எல்லோரும் பயப்படுவாங்க,யோசிப்பாங்க... இப்ப அந்த கவலை இல்ல.. ஷாப்பிங் மால்ல இருக்கேன்னு யோசிக்காம சொல்லிக்கலாம்.   டாஸ்மாக் பாரை தரைத்தளத்தில் அமைப்பது நலம்.ஏனெனில் உயரமான இடத்தில் வைத்தால் குடிமகன்கள் இறங்கிவரும்போது போதையும் இறங்கிவிட வாய்ப்பிருக்கிறது!   ஷாப்பிங் மால்களில் பெரும்பாலும் நுனி நாக்கு ஆங்கிலம் தேவைப்படுகிறது.ஆங்கிலம் தெரியவில்லை எனு தாழ்வு மனப்பான்மை கொண்டவர்க்கு அதை வெளிக்கொணர்வதில் டாஸ்மாக் பெரும்பங்கு வகிக்கிறது.எனவே,அத்தகையவர்கள

ஒற்றைப்பாத்திர சமையல்

        தொலைக்காட்சியில்,இணைய வெளிகளில் சமையல் நிகழ்ச்சிகள் எல்லாமே தொடங்கும் பொழுது ஒரு சுத்தமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றே துவங்கும். பலருக்கும் சமையலின்மேல் வெறுப்பைத் தருவதற்கு இந்த வாக்கியம் போதுமானது என்றால் அது மிகையாகாது.பாத்திரங்களைக் கழுவுவதுதான் அத்தகைய சிரமத்தைப் பலருக்கும் கொடுத்திருக்கிறது.பத்து நிமிடம் சமைப்பதற்காக, பல‌மணிநேரம் பத்துப் நம் நாட்டில் உண்டு என்பதை நாம் அறிவோம். இதற்குப் பயந்தே,உங்க‌ பொங்கச்சோறும் வேண்டாம்,பூசாரித்தனமும் வேண்டாம் என்று சமைக்கவே பலர் அஞ்சுகின்றனர்.            சோம்பல்கொண்ட அனைவருக்கும், குறிப்பாக பேச்சிலர்கள்,வீட்டைவிட்டு வெளியில் வந்து தங்கிப் படிப்பவர்கள், வேலை செய்பவர்கள் போன்றவர்களை மகிழ்ச்சியடையவைக்கவும் சமையல் வேலைகளை எளிதாக்கவும் ஏற்படுத்தப்பட்ட முயற்சிதான் ஒன்பாட்குக்கிங் எனப்படும் ஒற்றைப்பாத்திர சமையல்.இது ஒன்பாட் ஒன்ஷாட் சமையல் என்ற பெயரிலும் தற்போது பிரபலாமாகி வருகிறது.             என்னதான் ஒரு பாத்திரத்தை வைத்துச் சமைத்தாலும்,அதைக்கழுவும்போது அதைப் பத்துப்பாத்திரம் தேய்க்கிறேன் என்றுதான் சொல்வார்கள் என்பது வேறு விஷயம்.