இன்று ஹெலென் என்று ஒரு மலையாளப்படம் கண்டு…
எளிமையான கதைதான்..ஆனால் நெஞ்சை உறைய வைக்கும் கதை.. ஃப்ரீசரில் மாட்டிக்கொள்ளும் ஒரு பெண்குட்டியின் கதையை அப்ப்டித்தானே கூறவேண்டும்.
கண்களில், கனடா கனவுகளோடு chicken hub ல் வேலை செய்யும் செவிலி பாத்திரம் கதாநாயகிக்கு.
'ஒரு கதவு மூடப்படும்போது மற்றொரு கதவு திறக்கிறது.ஆனால் நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு,திறக்கப்படும் கதவைத் தவற விடுகிறோம்' என்பது பிரபல விஞ்ஞானி ஹெலன் கெல்லர் அருளியது.
இந்த ஹெலனோ,மற்றொரு கதவு திறக்க வாய்ப்பில்லாத,ஒரே கதவுள்ள கோழி இறைச்சியைச் சேமித்துவைக்கும் ஃப்ரீசரில் (ஜில்லறை?!) மாட்டிக்கொள்ளுகிறார்.அவரைக் காணாமல் அவரது தந்தையும் காதலரும் தேடுவதும்,அந்த ஜில்லறையிலிருந்து அவர் மீள முயல்வதும் விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஹெலெனின் அப்பா (லால்) யாரென்று பார்த்தால் அவர் ஏற்கனவே
இது போன்று 'ஷட்டர்' ஒன்றில் சிக்கித் தவித்து வெளிவந்தவர். அப்படியாகப்பட்டவர் தன் மகளுக்கு இது போன்ற சூழ்நிலை வராமல் காப்பது,அல்ல்து அதனை எதிர்கொள்ளும் பேரிடர் மேலாண்மையைத் தன் மகளுக்கு சொல்லித்தந்திருக்கவேண்டும்.(பறைஞ்ஜுகொடுத்தாலும் மதி)
பட்ட காலிலே படும் என்று ஒரு பழமொழி உண்டல்லவா?அடுத்த தலைமுறைக்கு இது நிகழலாகாது .அதனால் ஹெலென் தன் குழந்தைக்கு இது போன்றதொரு இடர் நிகழா வண்ணம் பார்த்துக்கொள்ளவேண்டும்!
எளிமையான கதைதான்..ஆனால் நெஞ்சை உறைய வைக்கும் கதை.. ஃப்ரீசரில் மாட்டிக்கொள்ளும் ஒரு பெண்குட்டியின் கதையை அப்ப்டித்தானே கூறவேண்டும்.
கண்களில், கனடா கனவுகளோடு chicken hub ல் வேலை செய்யும் செவிலி பாத்திரம் கதாநாயகிக்கு.
'ஒரு கதவு மூடப்படும்போது மற்றொரு கதவு திறக்கிறது.ஆனால் நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு,திறக்கப்படும் கதவைத் தவற விடுகிறோம்' என்பது பிரபல விஞ்ஞானி ஹெலன் கெல்லர் அருளியது.
இந்த ஹெலனோ,மற்றொரு கதவு திறக்க வாய்ப்பில்லாத,ஒரே கதவுள்ள கோழி இறைச்சியைச் சேமித்துவைக்கும் ஃப்ரீசரில் (ஜில்லறை?!) மாட்டிக்கொள்ளுகிறார்.அவரைக் காணாமல் அவரது தந்தையும் காதலரும் தேடுவதும்,அந்த ஜில்லறையிலிருந்து அவர் மீள முயல்வதும் விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஹெலெனின் அப்பா (லால்) யாரென்று பார்த்தால் அவர் ஏற்கனவே
இது போன்று 'ஷட்டர்' ஒன்றில் சிக்கித் தவித்து வெளிவந்தவர். அப்படியாகப்பட்டவர் தன் மகளுக்கு இது போன்ற சூழ்நிலை வராமல் காப்பது,அல்ல்து அதனை எதிர்கொள்ளும் பேரிடர் மேலாண்மையைத் தன் மகளுக்கு சொல்லித்தந்திருக்கவேண்டும்.(பறைஞ்ஜுகொடுத்தாலும் மதி)
பட்ட காலிலே படும் என்று ஒரு பழமொழி உண்டல்லவா?அடுத்த தலைமுறைக்கு இது நிகழலாகாது .அதனால் ஹெலென் தன் குழந்தைக்கு இது போன்றதொரு இடர் நிகழா வண்ணம் பார்த்துக்கொள்ளவேண்டும்!
நன்றி
பட உதவி:கூகுள்
பட உதவி:கூகுள்
கருத்துகள்
கருத்துரையிடுக