மிலிட்டரி ஹோட்டல் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?
ஒரு காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து மிலிட்டரி அல்லது ஆர்மி அல்லது
பட்டாளத்து வேலைக்காக சென்றவர்கள் அங்கு நம் ஊர் உணவுகளான இட்லி தோசைகளை
மறந்து சப்பாத்தி பராத்தா இவற்றை வேறுவழியின்றி உண்டு வந்தனர்.அசைவ
உணவுகளோடு அதன் சேர்க்கையை ரசிக்கத் தொடங்கி, நாளடைவில் அவற்றை விரும்பி
உண்ணவும் தொடங்கினார்கள்.யாம் பெற்ற இன்பம் இவ் வையகம் பெறவேண்டி பலர்
அவ்வகை உணவுகளை சமைக்கவும் கற்றுக்கொண்டனர்.
அந்தக் காலத்தில் வெளியில் சாப்பிடும் வழக்கமே குறைவுதான்.அப்படி இருந்தாலும் சைவ உணவகங்களே அதிகம் இருந்தன.அசைவ உணவுப் பிரியர்களுக்கு அவ்வளவாக உணவகங்கள் இல்லாத நிலையில் இவ்வகை மிலிட்டரி ஹோட்டல்கள் புகழ்பெறத் தொடங்கின.
துப்பாக்கி சுடத் தெரியாத மிலிட்டரிகாரர் தான் பட்டாளத்தில் சப்பாத்தி சுட்டதாக சொல்லும் காமெடி இதன் நீட்சியாக இருக்கக்கூடும்.
மிலிட்டரிக்காரர்கள் இள வயதிலேயே அதாவது 40,45 போன்ற வயதுகளில் ஓய்வு பெறுபவர்கள். ஊர்வந்த பிறகு ஓய்வில் என்ன செய்யலாம்? என்ன தொழில் செய்யலாம் என்று யோசிக்கையில் தாங்கள் கற்ற வித்தைகளை மொத்தமாக இறக்குவதற்காக சிலர் ஹோட்டல் ஆரம்பித்தனர் .ஆரம்ப காலகட்டங்களில் அவை மிலிட்டரி ஹோட்டல்கள் என்று பெயர் இல்லாவிட்டாலும் அனைவராலும் அது மிலிட்டரிகாரர் ஹோட்டல் என்று அழைக்கப்பட்டது.பின்னர் இவை பிரபலமானதும் மிலிட்டரி ஹோட்டல் என்பது பெயர்ப்பலகைகளில் கட்டாயமாக இடம்பெறத் தொடங்கியது.
முப்படைகளின் பரிச்சயம் கொண்ட அவர்கள் ஊர்வன,பறப்பன, நீந்துவன என அனைத்தையும் வழங்கத் தொடங்கினர்.சப்பாத்தி,பரோட்டா எனும் உணவுகளோடு அந்த சேர்க்கையை மக்கள் ரசிக்கத் தொடங்கினர்.
இட்லி தோசை பொங்கல் என்று ஒரே வகை உணவுகளை உண்டு சலிப்படைந்த நம் மக்கள் பரோட்டா சப்பாத்தி சிக்கன் சுக்கா போன்ற உணவுகளை முயற்சிக்க தொடங்கினர். இட்லி தோசை நிறைந்த இம் மண்ணில் பரோட்டா சப்பாத்திகளைப் பிரபலப்படுத்தியதில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு அசைவ ஹோட்டல்கள் என்றால் மிலிட்டரி ஹோட்டல் என்ற ஒரு நிலை உருவானது.
சப்பாத்திகளை மிலிட்டரிகாரர்கள் தவிர்த்து சர்க்கரை வியாதிக்காரர்களும் சாப்பிடத் தொடங்கினார்கள். இவ்வகையில் இவர்களும் மிலிட்டரி ஹோட்டல்களை நாடத் தொடங்கினர்.
அந்தக்காலத்தில் வெளியில் சாப்பிடும் வழக்கமே குறைவுதான்.அப்படி இருந்தாலும் சைவ உணவகங்களே அதிகம் இருந்தன. அசைவ உணவுப் பிரியர்களுக்கு அவ்வளவாக உணவகங்கள் இல்லாத நிலையில் இவ்வகை மிலிட்டரி ஹோட்டல்கள் புகழ்பெறத் தொடங்கின.
விடுமுறைக்கு வந்திருக்கும் மிலிட்டரிகாரர்கள் வீட்டில் அசைவம் இல்லாதபொழுது அவர்கள் நாடுவது மிலிட்டரி ஹோட்டல்களைத்தான். திரவ உணவாக மிலிட்டரி ரம் பருகியவர்களின் திட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது மிலிட்டரி ஹோட்டல்களே. குடிகாரர்களின் மன்னிக்கவும் மதுப்பிரியர்களின் மனங் கவர்வதும் இந்த மிலிட்டரி ஹோட்டல்கள் தான்!
இப்பொழுதெல்லாம் ஹோட்டல்களில் பரோட்டாக்களின் அணிவகுப்பு நடக்கின்றன. நாட்டுக்காக போராடியவர்களின் மிலிட்டரி ஹோட்டல்களில் நாட்டுக் கோழியுடன் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். சாதத்தில் பதுங்குகுழிகள்..சால்னா எல்லை தாண்டுகிறது..வழிந்து ஓடாமல் வாய்க்குள் போர் நடத்தும் வாடிக்கையாளர்கள் கண்கொள்ளாக் காட்சிதான் காணக் கிடைக்கின்றன.
ஜெய்ஹிந்த்!
அந்தக் காலத்தில் வெளியில் சாப்பிடும் வழக்கமே குறைவுதான்.அப்படி இருந்தாலும் சைவ உணவகங்களே அதிகம் இருந்தன.அசைவ உணவுப் பிரியர்களுக்கு அவ்வளவாக உணவகங்கள் இல்லாத நிலையில் இவ்வகை மிலிட்டரி ஹோட்டல்கள் புகழ்பெறத் தொடங்கின.
துப்பாக்கி சுடத் தெரியாத மிலிட்டரிகாரர் தான் பட்டாளத்தில் சப்பாத்தி சுட்டதாக சொல்லும் காமெடி இதன் நீட்சியாக இருக்கக்கூடும்.
மிலிட்டரிக்காரர்கள் இள வயதிலேயே அதாவது 40,45 போன்ற வயதுகளில் ஓய்வு பெறுபவர்கள். ஊர்வந்த பிறகு ஓய்வில் என்ன செய்யலாம்? என்ன தொழில் செய்யலாம் என்று யோசிக்கையில் தாங்கள் கற்ற வித்தைகளை மொத்தமாக இறக்குவதற்காக சிலர் ஹோட்டல் ஆரம்பித்தனர் .ஆரம்ப காலகட்டங்களில் அவை மிலிட்டரி ஹோட்டல்கள் என்று பெயர் இல்லாவிட்டாலும் அனைவராலும் அது மிலிட்டரிகாரர் ஹோட்டல் என்று அழைக்கப்பட்டது.பின்னர் இவை பிரபலமானதும் மிலிட்டரி ஹோட்டல் என்பது பெயர்ப்பலகைகளில் கட்டாயமாக இடம்பெறத் தொடங்கியது.
முப்படைகளின் பரிச்சயம் கொண்ட அவர்கள் ஊர்வன,பறப்பன, நீந்துவன என அனைத்தையும் வழங்கத் தொடங்கினர்.சப்பாத்தி,பரோட்டா எனும் உணவுகளோடு அந்த சேர்க்கையை மக்கள் ரசிக்கத் தொடங்கினர்.
இட்லி தோசை பொங்கல் என்று ஒரே வகை உணவுகளை உண்டு சலிப்படைந்த நம் மக்கள் பரோட்டா சப்பாத்தி சிக்கன் சுக்கா போன்ற உணவுகளை முயற்சிக்க தொடங்கினர். இட்லி தோசை நிறைந்த இம் மண்ணில் பரோட்டா சப்பாத்திகளைப் பிரபலப்படுத்தியதில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு அசைவ ஹோட்டல்கள் என்றால் மிலிட்டரி ஹோட்டல் என்ற ஒரு நிலை உருவானது.
சப்பாத்திகளை மிலிட்டரிகாரர்கள் தவிர்த்து சர்க்கரை வியாதிக்காரர்களும் சாப்பிடத் தொடங்கினார்கள். இவ்வகையில் இவர்களும் மிலிட்டரி ஹோட்டல்களை நாடத் தொடங்கினர்.
அந்தக்காலத்தில் வெளியில் சாப்பிடும் வழக்கமே குறைவுதான்.அப்படி இருந்தாலும் சைவ உணவகங்களே அதிகம் இருந்தன. அசைவ உணவுப் பிரியர்களுக்கு அவ்வளவாக உணவகங்கள் இல்லாத நிலையில் இவ்வகை மிலிட்டரி ஹோட்டல்கள் புகழ்பெறத் தொடங்கின.
விடுமுறைக்கு வந்திருக்கும் மிலிட்டரிகாரர்கள் வீட்டில் அசைவம் இல்லாதபொழுது அவர்கள் நாடுவது மிலிட்டரி ஹோட்டல்களைத்தான். திரவ உணவாக மிலிட்டரி ரம் பருகியவர்களின் திட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது மிலிட்டரி ஹோட்டல்களே. குடிகாரர்களின் மன்னிக்கவும் மதுப்பிரியர்களின் மனங் கவர்வதும் இந்த மிலிட்டரி ஹோட்டல்கள் தான்!
இப்பொழுதெல்லாம் ஹோட்டல்களில் பரோட்டாக்களின் அணிவகுப்பு நடக்கின்றன. நாட்டுக்காக போராடியவர்களின் மிலிட்டரி ஹோட்டல்களில் நாட்டுக் கோழியுடன் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். சாதத்தில் பதுங்குகுழிகள்..சால்னா எல்லை தாண்டுகிறது..வழிந்து ஓடாமல் வாய்க்குள் போர் நடத்தும் வாடிக்கையாளர்கள் கண்கொள்ளாக் காட்சிதான் காணக் கிடைக்கின்றன.
ஜெய்ஹிந்த்!
கருத்துகள்
கருத்துரையிடுக